Top Ad 728x90

More Stories

நட்பு கவிதை இயற்றியவர் களத்தூர் கார்த்திக்

by

அன்றும் இன்றும்

by
தாய்மை padam

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகையை வரமாய் வேண்டிநின்றனர்
இன்று உன் வருகையை சாபமாய் சாடுகின்றனர்
அன்று உன் வருகை அனைவருக்கும் ஆரவாரம்
இன்று உன் வருகை எங்களுக்கு அவமானம்
அன்று நீ வந்தவுடன் எத்தனை அரவணைப்பு
இன்று நீ வருவதால் எத்தனை அருவெறுப்பு
அன்று நீ வந்தவுடன் இன்புற்றாள் ஈன்றெடுத்தவள்
இன்று நீ வருவதால் துன்புறுகிறான் துணைநிற்பவன்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகைக்கு எத்தனை பிரார்த்தனைகள்
இன்று நீ வராமலிருக்க எத்தனை பரிகாரங்கள்
அன்று உன் வருகையை எதிர்நோக்கி ஏங்கியிருந்தனர்
இன்று நீ வராமலிருக்க குலசாமிக்கு கும்பிட்டுக்கொண்டனர்
அன்று உன் வருகைக்கு அன்னையின்  கைவைத்தியம்
இன்று நீ வராமலிருக்க அத்தையின் கைவைத்தியம்
அன்று தினந்தினம் வருவாயாவென்று பெற்றோருக்கு பேரார்வம்
இன்று மாதாமாதம் வந்துவிட்டாயேவென்று என்னவனுக்கு  ஏமாற்றம்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வராததால் அன்னைக்கு அவமானம்
இன்று உன் வருகையால் அன்பானவனுக்கு அவமானம்
அன்று காலத்தில் வராததால் தாய்க்கு தலைவலி
இன்று காலம்தாழ்ந்தும் வருவதால் தாலிகட்டியவனுக்கு தலைகுனிவு
அன்று  நீ வராததால் கன்னித்தன்மை கிடைக்கப்பெறவில்லை
இன்று உன் வருகையால் தாய்மைத்துவம் தரப்படவில்லை
அன்று நீ வராததால் மங்கையில்லை என்றனர்
இன்று உன் வருகையால் மலடிநான் என்கின்றனர்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வந்தவுடன் சீரெனக்கு செய்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் சீமந்தம் செய்திருப்பர்
அன்று நீ வந்தபோது வளையல்கள் அணிவித்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் வளைகாப்பு செய்திருப்பர்
அன்று அமர்ந்துவிட்டேனா என்று அம்மாவிடம் கேட்டனர்
இன்று அப்பாவாகிவிட்டாயா என்று அவரிடம் கேட்கின்றனர்
அன்று காலத்தில் நீ வராததால் கலக்கம்
இன்று கலந்தும் நீ வருகிறாயேவென்று கண்ணீர்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ காண்போருக்கெல்லாம் கதாநாயகியாய் காட்சிதந்தாய்
இன்று நீ வீட்டாருக்கு வில்லியாய் வெளிப்படுகிறாய்
பருவத்தில் வராததால் என் பெண்மை பரிகசிக்கப்பட்டது
ஆண்டுகளாகியும் வருவதால் அவர் ஆண்மை அசிங்கப்படுகிறது
அன்று நீ வந்தவுடன் ஊருக்கே விருந்து
இன்று நான் விருந்தாகியும் எனக்கின்று மருந்து
பருவத்தில் நான் பூப்பெய்யாததால் பெற்றோருக்கு பேரவமானம்
மணந்துநாளாகியும் நான் மசக்கையாகாததால் எங்களுக்கு மனவேதனை

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
தாய்மையடைய தாமதமாகும் தம்பதிகளுக்கோர் தாழ்மையான வேண்டுகோள்
இனியும் காத்திராமல் இன்றே மருத்துவரிடம் ஆலோசிக்கலாமே
ஆன்டுகளாய் பிரசவிக்காதவர்கள்கூட அறிவியலின் துணையால் ஆனந்தமடைந்துள்ளனர்
மனந்துவண்டவர்கள்கூட மகத்தான மருத்துவத்தால் மாதங்களில் மகப்பேறடைந்துள்ளனர்
மனிதமுயற்சியால் முடியாதவைகள்கூட மருந்துகளால் மாயமாய் அரங்கேறிகொண்டிருக்கிறது
சோதனைக்குழாய் குழந்தை, வாடகைத்தாயென்று சாதனைப்பல சாத்தியமாயுள்ளது
இதுவும் கடந்து போகுமென்று நம்பிக்கையுடன் நடக்கலாமே
மருத்துவத்தால் முடியாவிடில் தத்தெடுப்பதொன்றும் வெகு தொலைவிலில்லையே

- ஜெயச்சந்திரன்

நீ எனக்கில்லை

by
vel tech logo
ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஎன் தந்தை உமிழ்ந்த விந்தில் நீ இல்லைஎன் தாய்  கருப்பையில் தோன்றிய கருமுட்டையில் நீ இல்லைஇரண்டும் இணைந்து உருவான கருவிலும் நீ இடம் பிடிக்கவில்லைபெண் குழந்தையாய் பூவுலகில் நான் பிறந்த போது நீ எனக்கு இல்லைபத்து மாதம் சுமந்தவளின் மடியில் பால் குடித்த போது நீ என்னிடம் இல்லைமழலையாய் நான் மலர்ந்த போது நீ எனக்கு இல்லைதரணியில் நான் தவழ்ந்து நடந்த போது நீ என்னிடம் இல்லைபாலக வயதில் பள்ளி செல்லும் போது நீ எனக்கு இல்லை பேதையாய் நான் பாரில் உலாவந்த போது நீ என்னிடம் இல்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைபத்து வயதில் மெதுவாய் எனக்குளிருந்து நீ எட்டிப்பார்த்தாய்ஏதோ என் மேனியின் மேல் மெல்ல எழும்பக் கண்டேன்என் கழுத்துக்கும் வயிற்றுக்கும் இடையில் சில வினோத வித்தியாசங்களை கண்டு வியந்தேன்ஜோடியாய் வித்தியாசங்கள் இருந்தாலும், ஜோடிகளுக்குள் வேறுபாடுகள் இல்லை என்று தெளிந்தேன்புறத்திலும் அகத்திலும் மாற்றங்களை உணர்ந்தேன்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஉன்னை தொட்டுப்பார்த்த எனக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லைகுழந்தையாய் இருந்த என்னை குழம்பச்செய்தாய்ஏதும் அறியாத என்னை அச்சத்தில் ஆழ்த்தினாய்ஒன்றும் தெரியாத வயதிலிருந்த எனக்கு புரியாத புதிரானாய்பெற்றவளிடமும் இதைப்பற்றி பேசமுடியவில்லைஉடன்பிறப்புகளிடம் உன்னைப்பற்றி உரையாடமுடியவில்லைகூடிவிளையாடிய தோழிகளிடமும் கேட்கமுடியவில்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஉணர்ந்தேன் நான் இது பருவகாலத்தில் உடலில் ஏற்படும் உருவமாற்றமென்றுமழலையாய் இருந்த நான் மங்கையாக மாறப்போகிறேனென்றுமொட்டாய் இருந்த நான் அழகிய மலராய் மலரப்போகிறேனென்றுசறுக்குமரம் ஆடிய சிறுக்கி நான் சமையப்போகிறேனென்றுபதுமை நான் பெரியவளாய் ஆகப்போகிறேனென்றுபூப்பெய்து பெண்மையின் முழுமையை அடையப்போகிறேனென்றுஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைமுதன்முதலில் ரவிக்கை அணிந்த போது எத்தனை எத்தனை குதூகலங்கல் எனக்குள்மாராப்பு கொண்டு உன்னை மறைத்த போது எத்தனை எத்தனை மகிழ்ச்சிகள் எனக்குள்துப்பட்டா தோல்பட்டையிலிருந்து சரியாமல் இருக்க எத்தனை எத்தனை துடிதுடிப்புகள் எனக்குள்காளையர்கள் கடைக்கண்ணால் உன்னை கண்டபோது எத்தனை எத்தனை கர்வங்கள் எனக்குள்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைமுப்பதுகளின் தொடக்கத்தில் களையாய் முளைத்தன கட்டிகள் சில உங்கள் இருவருக்குள்களைதானே என்று கவனிக்காமல் இருந்தபோது, மெதுவாய் அவைகள் மலையாய் மாறினகேன்சராய் இருக்கக்கூடாது என்று குலசாமிக்கு கும்பிட்டுக்கொண்டேன்பிரச்சனையேதும் இல்லாமலிருந்தால் பாலாபிஷேகம் செய்வதாகவும் பிராத்தித்துக்கொண்டேன்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைபயாப்சி முடிவுகள் பக்கென்று என் மனதை பதறச்செய்தனபுரண்டுப்போனது என் வாழ்க்கை புற்றுநோய் என்ற மருத்துவர்களின் வார்த்தையை கேட்டுஇடிந்துப்போனேன் நான் இது நான்காம் நிலை என்ற இடியை சொன்ன போது மெல்ல மெல்ல வளர்ந்த உங்களை – ஒரேநாளில் மேசக்டாமி செய்து மரணிக்கச்செய்தனர்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைவருடங்களாய் வளர்ந்த உங்களை, அறுத்துப்போட்டனர் அரைமணி நேரத்தில் இணைப்பிரியா இரட்டையர்களாய் இருந்த உங்களின்  இறுதி கூட இணைந்தே இருந்ததுநீங்கள் வசித்த சுவடுகள் கூட தெரியாமல் சுவராய் மாறின அவ்விடங்கள்நொந்து நூலாயானேன், நீங்களில்லாத நிழல்பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் கண்ட போது எஞ்சிய காலத்திற்கு பஞ்சை கொண்டு நீங்கள் உள்ளதாய் உலகிற்கு பாசாங்கு காட்டச்சொன்னார்கள்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஎன்னவன் மட்டும் பார்த்த உங்களை ஏமாந்து இழந்துவிட்டேன்பருவத்தில் பார்த்துப்பார்த்து வளர்த்த உங்களை பாவிநான் பரிகொடுத்துவிட்டேன் கட்டியவன் மட்டும் கண்ட உங்களை களவில் தொலைத்துவிட்டேன் அறுக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல என் பெண்மையின் பாதியும் தான்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைகட்டில் சீண்டல்களில் இனி உங்களுக்கு  இடமில்லைகணவனின் பசிக்கு இனி ருசியான உணவில்லைபள்ளியறையின் பாலுணர்ச்சிகளில் இனி உங்களுக்கு பங்கு இல்லைதாலிக்கட்டியவனின் தாம்பத்தியத்துக்கு இனி தகுந்த தீணியுமில்லைபெறப்போகும் குழந்தைக்கு தாய்ப்பாலும் இல்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஇடைப்பட்ட காலத்தில் இடைச்சறுகளாய் வந்து நீ இல்லாமல் போனாலும்கரம் பிடித்த என்னவன் எக்காலத்திலும் நிரந்தரமாய் என்னுடன் உள்ளான்அன்பானவன் சொன்னான், அழகொன்றும் அதில் இல்லை அகத்தில்தான் உள்ளதென்றுஆலம் விழுதுகள் போல் ஆயிரமாயிரம் சொந்தங்கள் என்னை ஆதரிக்கவும் அரவணைக்கவும் இருக்க என் அங்கமாயிருந்த உங்களை இழந்ததற்காக இனியும் நான் அழப்போவதில்லைஏ பெண்ணினமே, என்னைப்போல் இனி யாரும் இவ்வுலகில் ஏமாறாதீர்கள்காலையில் குளிக்கும்போது சற்றே சில நிமிடங்கள் ஒதுக்கி சுயபரிசோதனை செய்யலாமேகாரணம் ஏதும் தேவையில்லை, வெறும் மரபணு மாற்றத்தாலேயே இது வரலாம் என்பதை புரிந்துக்கொள்ளலாமே உங்களின் மறபில் இந்நோய் இல்லாவிடிலும், வருடம் இருமுறை மேமோகிராம் செய்துக்கொள்ளலாமே

ஈன்றெடுத்த போது மார்பகங்கள்  எனக்கில்லை, இன்று மார்பகங்கள் என்னிடம் இல்லை
இவள்மயிரிழையில் மார்பக புற்றுநோயிலுருந்து உயிர் பிழைத்தவள்,
குறிப்பு: அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றுதலே Masectomy ஆகும்

புரிந்துவிட்டது உன் ஜனனமே

by
veltech logo
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
தாம்பத்தியம் இல்லை – ஆனாலும் நான் தாயாகப் போகிறேன்
களவு இல்லை – ஆனாலும் நான் கருவை சுமந்துகொண்டிருக்கிறேன்
மன்னவன் இல்லை  - ஆனாலும் நான் மாசமாய் உள்ளேன்
முத்தங்கள் இல்லை – ஆனாலும் நான் மூழ்காமல் இருக்கிறேன்
மகரந்தச்சேர்க்கை இல்லை – ஆனாலும் நான் மலரொன்றை மடிசுமக்கிறேன்
அன்பானவன் இல்லை – ஆனாலும் நான் அன்னையாகப் போகிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
தாலிக்கட்டியவனின் தழுவல்கள் இல்லை – ஆனாலும் நான் தாய்மை அடையப்போகிறேன்
கரம்பிடித்த கணவன் இல்லை – ஆனாலும் நான் கர்பமாய் இருக்கிறேன்
மணந்துகொண்ட மன்மதன் இல்லை – ஆனாலும் நான் மசக்கையாய் இருக்கிறேன்
காமத்து இன்பம் இல்லை – ஆனாலும் நான் பிரசவத்துன்பத்திற்கு தயாராயிருக்கிறேன்
சீண்டல்கள் சிறிதும் இல்லை – ஆனாலும் நான் சிசுவொன்றை சுமந்துக்கொண்டிருக்கிறேன்
தாலிக்கொடி கழுத்தில் இல்லை – ஆனாலும் நான் தொப்புள்கொடிமூலம் தொடர்பிலிருக்கிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பள்ளியறை பாலுணர்வுகள் இல்லை – ஆனாலும் நான் பத்துமாதம் சுமந்துனை பிரசவிக்கப்போகிறேன்
விந்து என்னவனுடையது இல்லை – ஆனாலும் நான் வயிற்றை அடிவரை தடவிப்பார்த்துக்கொள்கிறேன்
சினைப்பை முட்டை எனதில்லை – ஆனாலும் நானதை கருப்பையில் கவனமாய் காப்பாற்றிவருகிறேன்
கருவிலிருக்கும் சிசுஎனதில்லை – ஆனாலும் நான் அதற்கும் சேர்த்து சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
கணவனின் பசிக்கு விருந்தாகவில்லை – ஆனாலும் நான் ருசியானயுணவை உனக்கும்சேர்த்து புசித்துக்கொண்டிருக்கிறேன்
நிர்வாணமாய் நாயகன்முன் நிற்கவில்லை – ஆனாலும் நீயென் பனிக்குட நீரில் நீந்திக்கொண்டிருக்கிறாய்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
ஈரைந்து மாதங்கள் கருப்பையை வாடகைக்கு ஈன்றிருக்கிறேன்
கருவொன்று  குடியிருக்க குத்தகைக்கு நானதை கொடுத்திருக்கிறேன்
குழந்தையாய்மாறி குதிக்கும்வரை அது குடித்தனம்செய்ய கையெழுத்திட்டிருக்கிறேன்
இளம்விதவை நான் வறுமையால் வாடகைத்தாயாய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பத்துமாதம் சுமந்த எனக்கு உன் பாலினம் கூட தெரியப்போவதில்லை
மெல்லமெல்ல எனக்குள் வளர்ந்த உந்தன் மெய்நிறம் நான் அறியப்போவதில்லை
என்னுள் நீந்திக்கொண்டிருந்த உந்தன் நிழல் கூட என்மேல் படப்போவதில்லை
தொப்புள்கொடியை துண்டித்த பின் உன் சொந்தம் எனக்குத் தொடரப்போவதில்லை
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
பார்த்துப்பார்த்து வளர்த்த உனைநான் பார்க்கக்கூட முடியாது
தொப்புள்கொடி சொந்தம் உனைநான் தொடக்கூட முடியாது
முக்கியெடுத்த முத்து உனைநான் முத்தம் கொடுக்கமுடியாது
கட்டித்தங்கமாய் காத்த  உனைநான் கட்டி தழுவவும்முடியாது
தாம்பத்தியமின்றி பிறந்த உனக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாது
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
ஒப்பந்த காலம் முடியும்வரை என்னுள்லே நீ ஒன்றாயிருக்கப்போகிறாய்
ஒப்பந்தம் முடிந்தபின் நமக்குள் ஒன்றுமில்லையென்று நீ சொல்லப்போகிறாய்
தரணியை தொட்டவுடன் எனைவிட்டு தொலைதூரம் நீ பயணிக்கப்போகிறாய்
பிறந்தபின் உன் பெற்றோருடன் கடல்கடந்து நீ பறந்துச்செல்லப்போகிறாய்
பறக்கையிலேயே நம் பத்துமாத பந்தத்தை நீ மறந்துச்செல்லப்போகிறாய்
பேசிய ரொக்கத்தை கொடுத்துவிட்டு பேசாமலேயே நீ போகப்போகிறாய்
உன் பிறப்பால் எனக்கு பிரியாவிடை நீ தரப் போகிறாய்
புரிந்துவிட்டது உன் ஜனனமே நம் உறவின் மரணமென்று
அரிந்துகொண்டேன்நான் உன் பிறப்பே நம் பந்தத்தின் இறப்பென்று
தெரிந்துகொண்டேன்நான் உன் பிரசவமே நமக்கு பிரிவு உபசாரவிழாவென்று
ஜெயசந்திரன்

விக்ரமே எழுந்துவா

by
சந்திரயான் II விலிருந்து வெளிவரும் விக்ரம் செயற்க்கைகோள்

சந்திரயான் II விலிருந்து வெளிப்பட்ட பின்னர் நிலவில் விழுந்த விக்ரம் Landerஐ இருநாட்கள் கழிந்து கண்டெடுக்கப்பட்ட போது எழுதப்பட்டது:
விக்ரமே எழுந்துவா
பேசு விக்ரமே பேசு
தொட்டுவிடும் தூரத்தில் நீ இருந்த போது தொலைந்துவிட்டாய்
உனை காணாத இரு நாட்களும் இந்தியாவே இருளில் மூழ்கியது
உனை கண்டெடுத்தபின் பாரதமே பரவசமடைந்தது
உன் பேச்சை கேட்க 120 கோடி இந்தியனும் காத்துக்கொண்டிருக்கிறான்
பேசு விக்ரமே பேசு
பாரிலுள்ளோர் கண்ணீரை சிவனால் மட்டுமே துடைக்க முடியும் – ஆனால்
என் சிவனின் கண்ணீரை நீ மட்டுமே துடைக்க முடியும்
என் விஞ்ஞானியின் சோகத்தை உன்னால் மட்டுமே சுகமாய் மாற்ற முடியும்
அன்னை தேசமே ஒற்றைப்புள்ளி கவனமாய் உன் பேச்சை கேட்க காத்துக்கொண்டிருக்கிறது
பேசு விக்ரமே பேசு
விக்ரம் என்று நீ பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது
ஒன்பது வருடம் வெற்றியை ருசிக்காத விரக்தியிலிருந்த என் விக்ரம்
சேது படத்தில் சியானாய் சீறி எழுந்தான்
தமிழ் திரையுலகில் சாமியாய் இரந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறான்
திமிறி எழுந்த என் விக்ரமனை இன்று வரை யாரும் தோற்க்கடிக்க முடியவில்லை
விக்ரமன்களுக்கு தோல்வி ஒன்றும் புதியதொன்றுமில்லை
பேசு விக்ரமே பேசு
குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு கண்ணனே தேரோட்டி – அதுபோல்
இன்று பிரஞ்யானுக்கு நீயே தேரோட்டி என்பதை நினைவில் கொள்
அர்ஜுனன் தடம் தவறிய போது விஸ்வரூபம் கொண்டு திருத்தியவன் கண்ணனே - ஆனால்
இன்று பிரஞ்யானை வழிநடத்த வேண்டிய நீயே படுத்து கிடப்பது சரியா?
துவாபர யுகத்தில் ஓர் கண்ணன் போல, கலியுகத்தில் ஓர் விக்ரம் என்பதை சிந்தையில் நிறுத்து
பேசு விக்ரமே பேசு
இரளை கண்டு மிரளாதே, பள்ளத்தை கண்டு பயப்படாதே
உறங்காமல் உன்னை அல்லும் பகலும் காவலனாய் ஒருவன் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்
உரக்க பேச முடியாமல் பலவீனமாய் நீ இருந்தால்
உறங்காமல் உனை சுற்றிவரும் அவனிடமாவது பேசு
நீ சுமந்துகொண்டிருக்கும் பிரஞ்யானை பிரசவி
நீ வீறுகொண்டு எழுந்தால் விண்வெளி வரலாற்றில் இடம்பிடிப்பாய்
விழுந்தே கிடந்தால் வீணாய்தான்  போவாய்
பேசு விக்ரமே பேசு
- ஜெயசந்திரன்.

பார்வை

by
காலையின் பார்வையோ கதிரவனை நோக்கி!
மாலையின் பார்வையோ வென்மதியை நோக்கி!
மன்னின் பார்வையே வின்னை நோக்கி!
மழையை தருவாயோ என்ற நோக்கில்! 
மன்னின் பார்வையோ மதியை நோக்கி!
மதியற்றோர் பார்வையோ விதியை நோக்கி!
கண்ணின் பார்வையோ கலையை நோக்கி!
கலையின் பார்வையோ கவினை நோக்கி! 
காலையர் பார்வையோ கன்னியரை நோக்கி!
கண்ணியர் பார்வையோ காதலை நோக்கி!
வண்டின் பார்வையோ மலரை நோக்கி!
மலரின் பார்வையோ மாதர் கூந்தலை நோக்கி! 
இளைஞரின் பார்வையோ இணையத்தை நோக்கி!
எல்லாம் இதுதான் என்ற நோக்கில்!
உழவின் பார்வையோ உழைப்பை நோக்கி!
ஊதாரி பார்வையோ ஊரை ஏமாற்றும் நோக்கி! 
தமியரின் பார்வையோ தரணியை நோக்கி!
தலைமை தான் எம்மொழி என்ற நோக்கில்!
புறபார்வை காட்சிக்கு நன்று! என்றும்..
அகப்பார்வை அறிவுடை மாந்தர்க்கு நன்று! 
- சங்கர நாராயனன்

கானல் நீர்..!

by
தாய் தன் மகளை தூக்கி கொஞ்சும் படம்
பேசா மடந்தைகள் இனி பேசி தான் பழகட்டுமே!
தத்தி நடக்கும் செல்ல கிளிகள் கொஞ்சம் தடைகளை மீறட்டுமே!
வாழ பிறந்த வண்ண குயில் கதறி விம்மல் கொண்டதுவோ!!
பூத்து குளுங்கும் சின்னஞ்சோலை இங்கு கானல் நீராய் போச்சுதுவோ?
ஐயகோ! ஐயகோ!  என் வம்சம் வரண்டு போச்சுதே..
வான் நட்சத்திரம் இங்கு வந்து மலர்ந்து கறுகல் ஆச்சுதே..
என்னருகே கிடந்த உன்னை கவ்வியது நரி ஒன்று.
நம்பி அதை விட்டதற்கு துரோகம் பல செய்ததுவோ?
தூக்கி செல்கையிலே அன்னையென நினைத்தாயோ?
அப்பன் சுவாசம் இது அல்ல என்று புரிந்தாயோ?
வலியால் நீ அழுகையிலே உன் வாய் தனை அடைத்தானோ?
ஓங்கி நீ கதறுகையில் கழுத்தை தான் பிடித்தானோ?
ஓ! என் மகளே! நீ, பிறந்தது இந்த சிலுவையை சுமந்திட தானோ?
தெரிந்திருந்தால் நான் கர்பம் தவிர்த்திருப்பேனோ?
வெறும்  சில காலமென  உன் கணக்கை எழுதியவனுக்கு..
அவன் கணக்கை முடிக்க மனமில்லாமல் போனது ஏனோ?
தாய்மையை தந்த தாயே!
உனை காக்க மறந்திட்ட பேயென  உணர்கிறேன் நான்.
மன்னிப்பாயடி மகளே! இனி மீண்டும்
ஒரு பெண் குழந்தை இல்லையடி எனக்கு!
கங்கையென வந்தவளே.. என்
கருவறையை நிறைத்தவளே!
கானல் நீராய் போனதெங்கே?
என்னை கலங்க வைத்து போனதெங்கே?
வண்புணர்வுக்கு ஆலான அத்துனை
இளம் மொட்டுகளுக்கு சமர்ப்பனம்... 
- சோபியா மாலதி 

Top Ad 728x90

Top Ad 728x90